Abhirami Andhadhi Stanzas 58-61 | S J Janani

571 views · Published 20 February 2014 · 6:34 · Indexed 20 September 2026

Channel: Peppers TV · 2014 · Entertainment

Watch on YouTube

58: அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும் 
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர் நயனக் 
கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும், 
சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே.
59: தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது, என்று உன் தவநெறிக்கே 
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள்சிலையும் 
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்: அறியார் எனினும் 
பஞ்சு அஞ்சு மெல் அடியார், அடியார் பெற்ற பாலரையே.
60: பாலினும் சொல் இனியாய். பனி மா மலர்ப் பாதம் வைக்க-- 
மாலினும், தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின் 
மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒரு 
நாலினும், சால நன்றோ--அடியேன் முடை நாய்த் தலையே?
61: நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து, 
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம் 
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்.-- 
தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத் தங்கைச்சியே.

More from this channel